வெண்ணிலவில் ரோஜாத்தோட்டம்


கண்ணடிக்கும் விண்மீன்கள் 

உன் சிரிப்பினில்  மட்டும்
ஏனோ உருகிப்போகின்றேன்-நீ
தொட்டுவிடுகையில் என்னையே
தோற்றும் விடுகின்றேன்..

உன் வார்த்தைகள் ஒவ்வொன்றினுள்ளும்
ஏனோ வளைந்து நுழைகிறேன்-நீ
அடித்துவிடுகையில் என்னுள்
ஆழம் நிறைய சிரிக்கிறேன்..

விஞ்ஞானம்  சொல்லாத சுவையோ
அந்த விரல்களில்..
விடுகதையில்லாத  வெளிச்சங்களா
அந்த கண்களில்..
மல்லிகை இதழ்களிலும் மென்மையோ
அந்த கன்னங்களில்..
மயில் தோகையே  மனம்வருந்தும் அழகோ
அந்த தலைமயிர்களில்..

விண்மீன்களுக்கு கண்ணடிக்கக்
கற்றுக்கொடுத்தது நீதானோ..
பால் நதியில் குங்குமம் கொட்டிய போது
நீதான் நீராடிக்கொண்டிருந்தாயோ..
வெண்ணிலவில் ரோஜாத்தோட்டம்
விதைத்துவிட்டால் உன்னிறம் தானோ ஒளிக்கும் ..

ஓ.. மழலையே!

உன்னில் அந்த கண்ணாடி
முகம் பார்ப்பதை
கண்சிமிட்டாமல் இரசிக்கிறாயா?






2 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..

கொஞ்சலில் கொஞ்சம்



எச்சில் நட்சத்திரங்கள் 

மீண்டும் ஒரு முறை
தும்மி விடாதே அழகே
உன் எச்சில் துளிகளை
நட்சத்திரங்களாக அடுக்கி வைக்க
என்னால் இன்னுமொரு வானம்
செய்து தர முடியாது..
*********************************************************************************


மழலை காதலி 

உன்னை குழந்தையாக
பார்த்தே நான்
குழந்தையானேன் அழகே
உன்னிடத்தில்;
உயிரில்லாவிட்டாலும் நான்
உனக்குள் இருக்க வேண்டும்..
*********************************************************************************


பொறாமைக் காதல்..

உன்னில் பொறாமை கொண்டு
என்னை கண்டு
ஒருத்தி காதலிக்கிறேன் உன்னை
என்றால் என்னிடத்தில்..
காரணம்? என்றேன்..
நீ அல்ல உன்னவள் அழகுதான்
என்றாள் அந்த வெண்ணிலவு..
*********************************************************************************


விழிமூடாதே வெண்ணிலவே..

தேய்ந்து தேய்ந்து
அந்த வெண்ணிலவு தன்னை
மாய்த்துக்கொண்டது
உன்னழகில்  தோற்றதாலோ..



6 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..

ஒவ்வொரு தாயும் காதலித்தவள் தானே..



வயிற்றுக்குள்ளே இதயம் சுமந்தவள்!

ஒரு காதலில் பிறந்தவனா நான்
ஒரு காதலாய் வளர்ந்தவனா நான்
ஒரு காதலின் சுயநலமா நான்
ஒரு காதலன் கண்ட
உயிருள்ள நிலவிலிருந்து உதித்தவனா நான்..
காதலுக்காய் நீ சுமந்த இதயத்தை
கடைசிவரை கண்டுகளிப்பதற்காகவா நான்..
உயிரிலும் மேலான உன்னவனுக்கு
நீ அளித்த தந்தை வரம்தானா நான்..

தாயே!

விண்தொட்ட  உன் காதலுக்காய்
இந்த மண்ணில்
உதிர்ந்து விழுந்து
நடமாடும் நடசத்திரம் நான் தானே..

கொள்ளைப்பாசம் அள்ளி
உனக்குள்ளே நான் வாழ
வருசமெல்லாம் வருத்தம்
சுமந்தவளே..
பிறந்து வருகையிலே -நான்
உன்னுடல் விட்டு பிரிந்து செல்கையிலே..
உயிர்துண்டு கிழித்தென்னில் ஒட்டி அனுப்பியவளே..
வாழ் நாளில்
வயிற்றுக்குள்ளே
இதயம்  சுமப்பவள் நீ தானே..

இந்த பிரபஞ்சம் கண்ட ஒவ்வொரு அன்னையெருக்கும்  என் வாழ்த்துகளோடு..

0 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..

சித்திரை வெயிலோடு காதலி..



எரிகிறதே! என் வெண்ணிலவு.. 

வெள்ளை வெயிலிலும் 
உன் பொன் முகம் 
மின்னியதுதான்.. 
அந்த கண்ணாடி முகத்தில் 
முகம் பார்த்த வெயிலை 
வேக வைக்கவே நினைத்தேன்.. 

பனித்தோட்டத்து செடியை 
பாலைவன வெயிலில் கண்டேன்!  
நந்தவனத்துப்பூக்களை 
இதழ் இதழாய் 
எரித்துகொண்டிருக்கிறார்கள்..
பிஞ்சுக் கழுத்துக்கு 
தண்டவாளப்பொருத்தம் 
பார்க்கிறார்கள்..
தண்ணீர் மீனுக்கு 
தரைவழி காட்டுகிறார்கள்..

எந்தன் பாதிப்பார்வை 
உன்னை சுட்டாலும் 
சுருண்டு போவேன் கனவே.. 
இந்த சித்திரை வெயிலில் 
சிதறிப்போய்  நிற்கிறாயே!.. 

சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து  
உன்னை சுருட்டிக்கொள்ள ஒரு 
கைக்குட்டையாவது 
கைநீட்டிப்பார்க்கிறேன் கனவே..
கை விலங்கோடு 
எத்தனை கண்கள்-என் 
கைகளில் மொய்க்கின்றன..


2 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..

வைரமுத்துவோடு நான் சோவியத்திற்கு..


     வாசிப்பதற்கும்  எனக்கும் உள்ள தூரம் மருந்துக்கும் குழந்தைக்கும் உள்ள தூரத்திலும் அதிகமானது, எனினும் என்னைவிட அதிகமாய் புத்தகங்களை நான் நேசிப்பதுண்டு, குறைந்த பட்சமேனும் வாசிப்பதுண்டு.  நான் நேசிக்கும் புத்தகங்களில் இதுவரை வாசித்த புத்தகங்களுக்காகவே இந்த நூலகம். உங்களுடன்..

வைரமுத்துவோடு நான் சோவியத்திற்கு..

     முதன் முறையாக கவிப்பேரரசுடன் ஒரு வெளிநாட்டுப்பயணம் சென்றேன், அவரின் எழுத்துகளின்  ஊடான ஒரு பயணம்! அது சோவியத்தை நோக்கி.. அன்று கவிப்பேரரசின் மனசுக்குள் ஒரு பரவச நதி-கண்களை அகலப்படுத்திய ஒரு ஆச்சர்ய சந்தோசத்தை நான் உணர்ந்தது உண்மை. 
காரணம் 
சோவியத் என்பது ஒரு நாடல்ல பூமிப்பந்தில் அது இன்னொரு கிரகம். 
மௌனங்களால் அலங்கரிக்கப்பட்ட பூமியின் மற்றுமொரு கிரகம்,
மலர்களை மட்டுமே மந்திரங்களாக நம்பியிருக்கும் மாய பூமி அது..
தன்னைத்தானே தூசுதட்டிக்கொண்டிருக்கும் தூய்மையின் அந்தபுரம்..


அன்று அந்த கவிஞனின் கால்கள் சோவியத்தின் மண்ணில் பதிந்த போது,
"வைரமுத்து!
வாழ்கையின் மதிப்புமிக்க நிமிஷங்களில் 
வாழப்போகிறாய்;
உன் கண்களையும் காதுகளையும் 
எப்போதும் திறந்து வைத்திரு" என்று உள்மனதில் உயில் எழுதிக்கொண்டிருந்தார். 
சென்ற நோக்கம்  இந்தியக்கலை விழாவிற்கு விருந்தாளிகளாக. 
அனால் அங்கு கற்றுக்கொண்டதும்  உணர்ந்து முடிந்ததும் நிறையவே..

ரஷ்யாவின் அழகை விட அதன் வரலாறு ஆழமானது என்பதை புரிந்து கொண்டேன். 
இந்த பயணத்தில் கவிஞன் ரசித்த எத்தனையோ இடங்கள் இருக்கின்றன, கவிஞனின்  கண்ணீர் கசிந்த பொழுதுகளும் கணிந்திருக்கின்றன. 
ஒவ்வொரு இடங்களிலும் கவிஞனின் கண்கள் கொண்டு நான் கண்ட காட்ச்சிகளில் என்னை கவர்ந்தவற்றில் சிலவற்றை இங்கே உங்களுடன்..

பல்கலைக்கழக பாதையோரமாய் திருமணத்தம்பதிகளை கண்ட போது.. 
திருமணம் அங்கே 
இயல்பானது; எதார்த்தமானது;
வண்டு பூவில் தேனெடுப்பது போல் 
யாருக்கும் வலிக்காதது.
அங்கே எல்லா திருமணங்களுமே 
காதல் திருமணங்களே.

கலைவிழாவில்...
எந்தக் கலையும் 
முழுமையாய் அறியப்பட்டு 
நேசிக்கப்படுவதில்லை.

நிலா ஒரு கிரகம் என்பதையோ-
அது ஒரு பாலைவனம் என்பதையோ
அது பிச்சை வெளிச்சத்தில்தான் 
பிரகாசிக்கிறது என்பதையோ 
அறியாமலே கூட அது 
நேசத்திற்குரியதாய் இருக்க முடியுமல்லவா?

மின்ஸக் நகர் நோக்கி பயணிக்கையில்...
அவ்வளவு அழகையும் தூய்மையையும் 
ஒரு ரயில் பெட்டிக்குள் 
கம்பனின் மூளை கூட கற்பனை செய்துதர 
முடியாது..
படுக்கைகளில் மூன்றடி உயர மெத்தைகள்.
அதன்மேல் மல்லிகை பூவினும் 
மெல்லிய விரிப்பு.
மேகத்தை ஊதி அடைத்த 
இரண்டு தலையணைகள்.
கூந்தலைபோல் மிருதுவாக நெய்யப்பட்ட 
கம்பளிகள்.
கண்ணாடி ஜன்னலுக்கு 
குழந்தையின் கன்னத்தைபோன்ற 
மெல்லிய திரைகள்...

பாரதியின் மரண நிமிஷங்களை மொழிபெயர்த்து சொன்னபோது...
" பொழுது கருப்பாக விடிந்தது!
சூரியனின் மரணம் சொல்லிவிடப்பட்டது.
புயலின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
ஐயகோ!
நெருப்பை எரிக்க ஒரு மயானமோ
இறுதி  ஊர்வலத்தினரின் எண்ணிக்கை 
இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே!
மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்திரோ!
அவன் உடம்பில் மொய்த்த 
ஈக்களின் எண்ணிக்கையில் கூட 
ஆட்கள் இல்லையே!"

சர்கஸ் அரங்கில்..
"மனிதர்களை மிருகங்கள் மாதிரியும் 
மிருகங்களை மனிதர்கள் மாதிரியும் 
மாற்றிக்கட்டுவதே சர்கஸ் 
 அனுபவத்திற்க்குத்தான் .
இடமிருக்கிறதே தவிர ஆச்சர்யத்திற்கு இடமில்லை"

மின்ஸ்க்கின் அருங்காட்சியகம்..
அந்த அருங்காட்சியகத்தில் 
இத்தனை காட்ச்சிகளையும் 
இன்று மொத்தமாய் பார்த்திருந்தால் 
ஹிட்லர் கூட 
வெள்ளைப்புறா வளர்க்கவே  விரும்பியிருப்பார்.

இந்த பயணத்தில் கவிஞன் கற்றுகொண்டது ரஷ்யாவை.. மனித குலத்தை மங்காமல் பாதுகாக்கும் மகத்தான ஒரு பூமியை, நான் கற்க முயற்சித்தது கவிஞனை. இங்கே குறிக்கப்பட்டிருப்பதெல்லாம் ஒரு பெரும் விருட்சத்தின் அழகிய மலர்களை மட்டும் தான், அதன் கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆட விரும்பினாலோ, ஆணி வேரின் ஆழம் அறிய நினைத்தாலோ கவிஞரின் இந்த புத்தகத்தை படியுங்கள் ..

வடுகபட்டி முதல் வால்கா வரை 

இறுதியாக கவிஞர் இந்த பயணத்தில் இப்புத்தகம் பற்றி குறிப்பிடுகையில்..
வால்காவிலிருந்து 
ஒரு டம்ளர் நீர்தான் 
மொண்டுவந்தேன் 
இதோ 
ஊருக்கெல்லாம் 
ஒவ்வொரு சொட்டு.
                     வைரமுத்து..

**********************************************************************************************************************************************************


1 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..

தோழியே நான் காதலிக்கிறேன்..



நான் உறங்கிவிடக்கூடாது 
என்பதற்காக 
சூரியனை 
இரவல் கேட்டவள் நீ.. 
நான் பத்திரப்படுத்தி பழக 
கண்களை 
கையில் தந்தவள் நீ.. 
நான் மெய்மறந்து விடக்கூடாது 
என்பதற்காக 
வெண்ணிலவை 
விரட்டி விட்டவள் நீ.. 
நான் உடைத்து விளையாட 
அடிக்கடி 
இதயம் தந்தவள் நீ..

என் தோழி நீ! 
நான் 
காதலிக்கிறேன் கண்மணி..  
உன்னை 
அல்ல- 
நம் நட்பை..

irfan zarook
 

3 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..

இதயமே எறிந்துவிடாதே!


ன் இதயம் எரிகிறது அன்பே 
என்னை சுவாசிக்காதே 
பாவம் நீ 
பாவப்படிமங்கள் உன்னிலும் 
படிந்து விடலாம்.. 
என் 
நாடியில் நிரம்பியிருக்கின்ற 
உன் நினைவுகளை 
நாளத்தில் சேர்ந்திருக்கும் 
அக்கினி குழம்புகளில் 
கரைகிறதே 
என்ன செய்வேன்..
கண்முன்னே உன் காதலிருந்தும் 
விளித்திரையில்லாத விழிகளால் 
என்ன செய்வேன்.. 
போய்விடு அன்பே 
போய்விடு.. 

பேய்கள் நிரம்பியிருக்கும் 
என் போர்வைக்குள் 
உன்னை என்னால் 
போர்த்திக்கொள்ள முடியாது 
அன்பே  
போய்விடு.. 
உன்னிதயம் 
போர்த்திவைத்த என்னுயிர் 
காயம் கண்டு 
கிழிந்து போகிறதே 
அது 
எரிகல் விழுந்த 
ஏறும்ப்புக்கூடாகிறதே 
என்ன செய்வேன்..

ஒன்றாய் கோர்த்திருந்த 
இரட்டை உயிர்கள் 
இருதிசை செல்லுகையில் 
வேதனைதான்..
என்ன செய்வேன்..
உனக்கு முன் நான் 
இறந்துவிட வேண்டும் என்பது 
என் 
சுயநலம்..

பாதனியிட்டு பாதுகாத்தும்-என் 
பாதங்கள் சிதைந்துவிட்டன 
அன்பே.. 
சிறகிருந்தும் என்ன பயன் 
என்  பாதையில்  
அந்த காற்று கூட 
வழி விலகி நிற்கிறதே..
என் காயங்கள் 
இதயங்களை 
எரித்துக் கொண்டிருக்கிறது 
எத்தனை 
இதயங்கள் இறைஞ்சுவேன் 
அன்பே உன்னிடம்..

வலிகளால் 
வளைந்து கிடக்கும் 
என்னால் உன்னை -என் 
நிமிடங்களில் நிறுத்திவைக்க 
எப்படி முடியும் அன்பே..

போய்விடு அன்பே 
போய்விடு..


irfan zarook


1 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..

நான்



விரல்களின் முதற்பதிவில் என்னை  பதிவிட வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவு 
இது இந்த  விரல்களுக்குத்தான் முதற் பதிவு என் விரல்களுக்கல்ல,
இது,
உங்களின் சில நிமிடங்களை சொந்தமாக்கிகொண்ட ஒரு சுயநல வாதியின் சுயம்புலம்பல்.



நான் ஒரு விஞ்ஞான மாணவன்- கலையுமானவன் 
எனது விஞ்ஞானம் கலையுடன் முளைத்தது 
எனது கலை விஞ்ஞானத்தில்  விளைந்தது..




       இர்பான் எனது இயற்பெயர், தம்பனூர் என்றழைக்கப்படும் தம்பாலையில் நானும் ஒருவன். உயர்தரத்தில் உயர்ந்த பெறுபேறு , அதனால் நிகழ்காலத்தில் கொஞ்சம் பிரபலம்.. (எங்க ஊர்ல மட்டும்தாங்க..) என் தொழிலியல் நோக்கம் ஒரு மருத்துவர் என்றாலும் என் மறுபக்கம் வெள்ளைக் காகிதங்கள் தான்.. அவற்றை அடிக்கடி நிரப்ப நினைப்பதுண்டு, அழகான ஓவியங்கள் வரைய முயல்வதுண்டு.. என் கற்பனைகள் மலையளவு என்றாலும், நான் செய்வது மண் துகள்கள் தான்.
        என் முதல் முயற்சி இதுவல்ல,முதல் அடி பல முறை வைத்தாலும் கலைகளுக்கு நான் பத்துமாத குழந்தைதான். எழுந்து நின்ற மறுகணமே விழுந்தும் விடுவேன். "எத்தனை ஆற்றல் தான் என்னுள் விதைக்கப்பட்டிருந்தாலும் காலம் கேட்கும் நிபந்தனைகள் நிறைவேறும் வரை அவை உறங்கு நிலையிலேதான்" என்ற மூட நம்பிக்கையை தகர்த்தெறிந்து இன்று எழுந்து நிற்கிறேன்-முடிந்தளவு.
நான் 
பார்ப்பவற்றைஎல்லாம் படைக்க நினைக்கும் ஒரு பேராசைக்காரன், இந்த உலகத்தை முடிவிலியாய் தேட நினைக்கும் ஒரு சோம்பேறி, பொக்கிஷங்களை பூட்டிவைத்திருக்கும் ஒரு தகரப்பெட்டி.. சில சமயங்களில் என்னை நானே புகழ்ந்து கொள்வதுண்டு, பல சமயங்களில் இகழ்ந்தும் கொள்வதுண்டு! நான் யார் என்பதை இருபத்தொரு வருடங்களாய்(நான் பிறந்ததிலிருந்து) தீர்மானித்துக் கொண்டிருக்கிறேன், இறக்கமுன்னர் அறிந்துகொள்ளவும் நினைக்கிறேன்..
        என் கனவுகள் எத்தனையோ, அவை  நான் தொலைத்துவிட்ட சிலம்பினுள் சிதறிப்போன முத்துகள். என் கிறுக்கல்களால் அவற்றை தேட முயற்சிக்கிறேன், என் பக்கங்களில் அவற்றை செதுக்க நினைக்கிறேன். என்னை அறியாத என் எழுத்துகளின் தூரம் எதுவரை என எனக்கு தெரியாது.. இருந்தும் எழுதுகிறேன் என் இறுதிவரை..
இது 
என்னில் இந்த உலகை செதுக்க பார்க்கும்-நான்!


irfan zarook

2 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..

கவிதைகள்


நான் கரைகையிலே என்னில் கண்ட வெளிச்சங்கள்..

2 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..