கொஞ்சலில் கொஞ்சம்



எச்சில் நட்சத்திரங்கள் 

மீண்டும் ஒரு முறை
தும்மி விடாதே அழகே
உன் எச்சில் துளிகளை
நட்சத்திரங்களாக அடுக்கி வைக்க
என்னால் இன்னுமொரு வானம்
செய்து தர முடியாது..
*********************************************************************************


மழலை காதலி 

உன்னை குழந்தையாக
பார்த்தே நான்
குழந்தையானேன் அழகே
உன்னிடத்தில்;
உயிரில்லாவிட்டாலும் நான்
உனக்குள் இருக்க வேண்டும்..
*********************************************************************************


பொறாமைக் காதல்..

உன்னில் பொறாமை கொண்டு
என்னை கண்டு
ஒருத்தி காதலிக்கிறேன் உன்னை
என்றால் என்னிடத்தில்..
காரணம்? என்றேன்..
நீ அல்ல உன்னவள் அழகுதான்
என்றாள் அந்த வெண்ணிலவு..
*********************************************************************************


விழிமூடாதே வெண்ணிலவே..

தேய்ந்து தேய்ந்து
அந்த வெண்ணிலவு தன்னை
மாய்த்துக்கொண்டது
உன்னழகில்  தோற்றதாலோ..



6 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..

ஒவ்வொரு தாயும் காதலித்தவள் தானே..



வயிற்றுக்குள்ளே இதயம் சுமந்தவள்!

ஒரு காதலில் பிறந்தவனா நான்
ஒரு காதலாய் வளர்ந்தவனா நான்
ஒரு காதலின் சுயநலமா நான்
ஒரு காதலன் கண்ட
உயிருள்ள நிலவிலிருந்து உதித்தவனா நான்..
காதலுக்காய் நீ சுமந்த இதயத்தை
கடைசிவரை கண்டுகளிப்பதற்காகவா நான்..
உயிரிலும் மேலான உன்னவனுக்கு
நீ அளித்த தந்தை வரம்தானா நான்..

தாயே!

விண்தொட்ட  உன் காதலுக்காய்
இந்த மண்ணில்
உதிர்ந்து விழுந்து
நடமாடும் நடசத்திரம் நான் தானே..

கொள்ளைப்பாசம் அள்ளி
உனக்குள்ளே நான் வாழ
வருசமெல்லாம் வருத்தம்
சுமந்தவளே..
பிறந்து வருகையிலே -நான்
உன்னுடல் விட்டு பிரிந்து செல்கையிலே..
உயிர்துண்டு கிழித்தென்னில் ஒட்டி அனுப்பியவளே..
வாழ் நாளில்
வயிற்றுக்குள்ளே
இதயம்  சுமப்பவள் நீ தானே..

இந்த பிரபஞ்சம் கண்ட ஒவ்வொரு அன்னையெருக்கும்  என் வாழ்த்துகளோடு..

0 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..