வெக்கமெல்லாம் வெடுவெடுக்க




எந்த நொடி 
இந்த மடி?
காதோடு நீ பேச
காவியத்த நான் எழுத.. 
கன்னங்கள் திண்ட மிச்சம் 
கழுத்தோரம் கண்ட மச்சம் 
கருங்கூந்தல் களஞ்ச சொச்சம்!
போதும் என்று சொல்லலியே
போனவளும் திரும்பலியே..

நீ பார்க்க 
நான் தினுக்க 
நாவோரம் நீ இனிக்க
வெக்கமெல்லாம் வெடுவெடுக்க
வெரலோரம் நீ கசிய 
காகிதத்தில் எழுதலியே 
நம்ம காதலுக்கு எல்லலியே..

நீ தொட்ட தேகமெல்லாம் 
நரம்புக்கு நடுமடிப்பு
உன் கத பட்ட 
காதுக்க இதயங்க இடம்புடிப்பு..
கண்டபடி கலஞ்சு போட்டே 
விழிக ரெண்டும் வெசாலமாச்சே
புரியாம பொறிவச்சு 
புதினமெல்லாம் அந்துபோச்சே..

ஏரிழுத்துப் போறவளே
இறுமாப்பு உனக்கெதுக்கு?
எடுகெட்ட பயலு என்டு
எகத்தாளம் எதுக்கொனக்கு?
காத்திருக்க நான் மாட்டேன் 
கலண்டரு நம்பர் 
திரும்பி வரும்!
கனவுக்க நான் வந்தா 
கதவு வெச்சு அடச்சுராத..

*********************************************************************************************************************************
-Irfan Zaruk

0 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..

விஞ்ஞானக் கற்கள்

விஞ்ஞானக் கற்கள்



ஒவ்வொரு இரத்த சரித்திரத்திலும்
இரண்டாய் பிளக்கப்பட்டது நான்
நான் மட்டும்தான்..
காட்டுயானைகளுக்கு கால்த்தடம்
பதிக்கவல்லவா இதயங்களில்
இரும்புத் தொட்டிகள் செய்தேன் ..

பற்றி எரியும் நெருப்பிலே
படுக்கையறைகள் செய்வதும்..
சொட்டுச் சொட்டாய்
இரசாயனங்கள் இட்டு
பாரம்பரியங்களில் பட்டை சீவியதும்
பட்டுத்துணி செய்ய
பட்டம்பூச்சிகள் பலிகொடுப்பதும்..
இங்கேதான்!

விரல்பிடித்து நடக்கையிலே
விலங்கிட்டு நிறுத்தியதும்..
இறந்து இறந்து போகையிலே
சிறந்து போவேன் என்றதும்..
எழுந்து எழுந்து நிற்கையிலே
இயலாமை கண்டதும்..
புதுமை காண்கையிலே
புயல்களை அள்ளி வீசியதும் ..
பளிங்குகளை தந்துவிட்டு
முனைகளால் முதுகில் குத்தியதும்..
எந்தன் எறும்புக்கூட்டுக்குள்ளே
எரிகற்கள் நட்டு வைத்ததும்..
உயிர்துண்டுகள் கிழித்தென்னில்
ஊசியேற்றி ருசித்ததும்..
இவர்கள்தான்!

என்ன செய்வேன்..

காகிதக்கப்பலேறி
கடற்குழியில் விழுந்தேனோ ..
கல்லறை கண்டு கைகொட்டிச்
சிரித்தேனோ..
அக்கினிகுழம்பினுள்ளே ஆக்சிஜனுக்கு
ஆணையிட்டு நிறுத்தேனோ - நான்
ஆகாயம் கிழித்து அதில்
அவலட்சணம் செய்தேனோ..

போதும்!

இந்த மரக்கட்டைகளில்
மனித நரம்புகள் தேடியதும்..
மாவிலைகளில்
மஞ்சளரைத்துப் பூசியதும்..
குப்பைதொட்டிகளில் - நான்
பொக்கிஷங்கள் நட்டுவைத்ததும்..
முடிந்து போகட்டும்!

மயில் சிறகு கட்டி
மலையிலிருந்து குதித்தாலும்
மண் துகள்களுக்கு
மகரந்தம் கற்றுக்கொடுக்க
மாட்டேன்..
எனக்கும் தெரியும்
விண்மீன்களுக்கு
விஞ்ஞானக் கற்கள்
என்று சொல்ல!


-Irfan Zaruk

0 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..