வைரமுத்துவோடு நான் சோவியத்திற்கு..


     வாசிப்பதற்கும்  எனக்கும் உள்ள தூரம் மருந்துக்கும் குழந்தைக்கும் உள்ள தூரத்திலும் அதிகமானது, எனினும் என்னைவிட அதிகமாய் புத்தகங்களை நான் நேசிப்பதுண்டு, குறைந்த பட்சமேனும் வாசிப்பதுண்டு.  நான் நேசிக்கும் புத்தகங்களில் இதுவரை வாசித்த புத்தகங்களுக்காகவே இந்த நூலகம். உங்களுடன்..

வைரமுத்துவோடு நான் சோவியத்திற்கு..

     முதன் முறையாக கவிப்பேரரசுடன் ஒரு வெளிநாட்டுப்பயணம் சென்றேன், அவரின் எழுத்துகளின்  ஊடான ஒரு பயணம்! அது சோவியத்தை நோக்கி.. அன்று கவிப்பேரரசின் மனசுக்குள் ஒரு பரவச நதி-கண்களை அகலப்படுத்திய ஒரு ஆச்சர்ய சந்தோசத்தை நான் உணர்ந்தது உண்மை. 
காரணம் 
சோவியத் என்பது ஒரு நாடல்ல பூமிப்பந்தில் அது இன்னொரு கிரகம். 
மௌனங்களால் அலங்கரிக்கப்பட்ட பூமியின் மற்றுமொரு கிரகம்,
மலர்களை மட்டுமே மந்திரங்களாக நம்பியிருக்கும் மாய பூமி அது..
தன்னைத்தானே தூசுதட்டிக்கொண்டிருக்கும் தூய்மையின் அந்தபுரம்..


அன்று அந்த கவிஞனின் கால்கள் சோவியத்தின் மண்ணில் பதிந்த போது,
"வைரமுத்து!
வாழ்கையின் மதிப்புமிக்க நிமிஷங்களில் 
வாழப்போகிறாய்;
உன் கண்களையும் காதுகளையும் 
எப்போதும் திறந்து வைத்திரு" என்று உள்மனதில் உயில் எழுதிக்கொண்டிருந்தார். 
சென்ற நோக்கம்  இந்தியக்கலை விழாவிற்கு விருந்தாளிகளாக. 
அனால் அங்கு கற்றுக்கொண்டதும்  உணர்ந்து முடிந்ததும் நிறையவே..

ரஷ்யாவின் அழகை விட அதன் வரலாறு ஆழமானது என்பதை புரிந்து கொண்டேன். 
இந்த பயணத்தில் கவிஞன் ரசித்த எத்தனையோ இடங்கள் இருக்கின்றன, கவிஞனின்  கண்ணீர் கசிந்த பொழுதுகளும் கணிந்திருக்கின்றன. 
ஒவ்வொரு இடங்களிலும் கவிஞனின் கண்கள் கொண்டு நான் கண்ட காட்ச்சிகளில் என்னை கவர்ந்தவற்றில் சிலவற்றை இங்கே உங்களுடன்..

பல்கலைக்கழக பாதையோரமாய் திருமணத்தம்பதிகளை கண்ட போது.. 
திருமணம் அங்கே 
இயல்பானது; எதார்த்தமானது;
வண்டு பூவில் தேனெடுப்பது போல் 
யாருக்கும் வலிக்காதது.
அங்கே எல்லா திருமணங்களுமே 
காதல் திருமணங்களே.

கலைவிழாவில்...
எந்தக் கலையும் 
முழுமையாய் அறியப்பட்டு 
நேசிக்கப்படுவதில்லை.

நிலா ஒரு கிரகம் என்பதையோ-
அது ஒரு பாலைவனம் என்பதையோ
அது பிச்சை வெளிச்சத்தில்தான் 
பிரகாசிக்கிறது என்பதையோ 
அறியாமலே கூட அது 
நேசத்திற்குரியதாய் இருக்க முடியுமல்லவா?

மின்ஸக் நகர் நோக்கி பயணிக்கையில்...
அவ்வளவு அழகையும் தூய்மையையும் 
ஒரு ரயில் பெட்டிக்குள் 
கம்பனின் மூளை கூட கற்பனை செய்துதர 
முடியாது..
படுக்கைகளில் மூன்றடி உயர மெத்தைகள்.
அதன்மேல் மல்லிகை பூவினும் 
மெல்லிய விரிப்பு.
மேகத்தை ஊதி அடைத்த 
இரண்டு தலையணைகள்.
கூந்தலைபோல் மிருதுவாக நெய்யப்பட்ட 
கம்பளிகள்.
கண்ணாடி ஜன்னலுக்கு 
குழந்தையின் கன்னத்தைபோன்ற 
மெல்லிய திரைகள்...

பாரதியின் மரண நிமிஷங்களை மொழிபெயர்த்து சொன்னபோது...
" பொழுது கருப்பாக விடிந்தது!
சூரியனின் மரணம் சொல்லிவிடப்பட்டது.
புயலின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
ஐயகோ!
நெருப்பை எரிக்க ஒரு மயானமோ
இறுதி  ஊர்வலத்தினரின் எண்ணிக்கை 
இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே!
மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்திரோ!
அவன் உடம்பில் மொய்த்த 
ஈக்களின் எண்ணிக்கையில் கூட 
ஆட்கள் இல்லையே!"

சர்கஸ் அரங்கில்..
"மனிதர்களை மிருகங்கள் மாதிரியும் 
மிருகங்களை மனிதர்கள் மாதிரியும் 
மாற்றிக்கட்டுவதே சர்கஸ் 
 அனுபவத்திற்க்குத்தான் .
இடமிருக்கிறதே தவிர ஆச்சர்யத்திற்கு இடமில்லை"

மின்ஸ்க்கின் அருங்காட்சியகம்..
அந்த அருங்காட்சியகத்தில் 
இத்தனை காட்ச்சிகளையும் 
இன்று மொத்தமாய் பார்த்திருந்தால் 
ஹிட்லர் கூட 
வெள்ளைப்புறா வளர்க்கவே  விரும்பியிருப்பார்.

இந்த பயணத்தில் கவிஞன் கற்றுகொண்டது ரஷ்யாவை.. மனித குலத்தை மங்காமல் பாதுகாக்கும் மகத்தான ஒரு பூமியை, நான் கற்க முயற்சித்தது கவிஞனை. இங்கே குறிக்கப்பட்டிருப்பதெல்லாம் ஒரு பெரும் விருட்சத்தின் அழகிய மலர்களை மட்டும் தான், அதன் கிளைகளில் ஊஞ்சல் கட்டி ஆட விரும்பினாலோ, ஆணி வேரின் ஆழம் அறிய நினைத்தாலோ கவிஞரின் இந்த புத்தகத்தை படியுங்கள் ..

வடுகபட்டி முதல் வால்கா வரை 

இறுதியாக கவிஞர் இந்த பயணத்தில் இப்புத்தகம் பற்றி குறிப்பிடுகையில்..
வால்காவிலிருந்து 
ஒரு டம்ளர் நீர்தான் 
மொண்டுவந்தேன் 
இதோ 
ஊருக்கெல்லாம் 
ஒவ்வொரு சொட்டு.
                     வைரமுத்து..

**********************************************************************************************************************************************************


1 comment:

  1. vairamuththu udan nanum payaniththen.angu nihalum thirumanam pol ingu oru thirumanam sari nihaluma enru kaththirukkiren.aanal poovil vandu saaru eduppathu pol kanamaka ullana inge kalyanangal.

    ReplyDelete

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..