தோழியே நான் காதலிக்கிறேன்..



நான் உறங்கிவிடக்கூடாது 
என்பதற்காக 
சூரியனை 
இரவல் கேட்டவள் நீ.. 
நான் பத்திரப்படுத்தி பழக 
கண்களை 
கையில் தந்தவள் நீ.. 
நான் மெய்மறந்து விடக்கூடாது 
என்பதற்காக 
வெண்ணிலவை 
விரட்டி விட்டவள் நீ.. 
நான் உடைத்து விளையாட 
அடிக்கடி 
இதயம் தந்தவள் நீ..

என் தோழி நீ! 
நான் 
காதலிக்கிறேன் கண்மணி..  
உன்னை 
அல்ல- 
நம் நட்பை..

irfan zarook
 

3 comments:

  1. ம்ம்ம் கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. தங்களை தொடர்ந்தும் வரவேற்கிறேன் தோழரே..

      Delete
  2. நான் உடைத்து விளையாட
    அடிக்கடி
    இதயம் தந்தவள் நீ..

    என் தோழி நீ!
    நான்
    காதலிக்கிறேன் கண்மணி..
    உன்னை
    அல்ல-
    நம் நட்பை..

    அழகான வரிகள்.!
    இறுதி வரியினில் துளிர்த்து உயிர்க்கின்றது நட்பு ..

    Best wishes!



    ReplyDelete

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..